இன்றுதான் புதியதாய் பிறந்தோம்

.
-----------------------------------------------------------
இன்றுதான் புதியதாய் பிறந்தோம்...
புதிய சிறகுகள் வாங்கி வான வீதிக்கு வருவோம்!
இதயத்தின் உயரம் கொண்டு..
இமயத்தின் உயரம் குறைப்போம்!
நட்பெனும் பாலம் அமைத்து,
நலம்பல நாளும் சேர்ப்போம்...!
வாடும் பயிராய் வாழ்வோர் விதியினை மாற்றி..
வாழும் வாழ்க்கை சுகமென ஆக்கி..
முகவரி தேடும் இளைய சமுதாத்திற்கு,
நம்பிக்கையெனும் புதிய முகவரி தருவோம்!
-----------
காலை வணக்கத்துடன்....

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (5-May-15, 7:12 am)
பார்வை : 156

மேலே