ஆலமரத்து விழுது

------ பழுதில்லா விழுது ------
------ பழுதில்லாமல் விழுது ------
------ மாடுகளின் வாலென விழுது ------
------ வந்தோர் தொங்கிட விழுது ------
------ பாம்பு யென விழுது ------
------ கண்டோர் பயந்திட விழுது ------
------ மலையருவி யென விழுது ------
------ தரையில் படர்ந்திட விழுது ------
------ மண்ணோடு விழுது ------
------ கதைகள் பேசிட விழுது ------
------ காற்றோடு விழுது ------
------ கவிதைகள் பேசிட விழுது ------
------ மழை யென விழுது ------
------ வேரின் மடியெங்கும் விழுது ------
------ அதிசய விழுது ------
------ ஆளுயர கடந்திட்ட விழுது ------
------ ஆதிக்காலத்து விழுது ------
------ மனிதர்கள் பல கண்டிட்ட விழுது ------
------ தலைமுறை பல தாண்டிட்ட விழுது ------
------ இந்த ஆலமரத்து விழுது ------


தொடரும்
பாரதி செல்வராஜ்

எழுதியவர் : பாரதி செல்வராஜ் . செ (23-May-15, 8:13 pm)
பார்வை : 570

மேலே