என் தேடலின் சிலப் பக்கங்கள் - உதயா

அனைவருக்கும் வணக்கம் .

என் தேடலின் பக்கத்தில் சிலவற்றை இங்கு பதித்துள்ளேன் . சற்று நீளமான பதிப்புதான். படிக்க விரும்புவோர் பொறுமையாக படித்து கருத்திடவும். என் தேடலின் பதிப்பில் தவறு இருப்பின் தாராளமாக கருத்தில் பதிவிடலாம்.

இனி என் தேடலை பார்ப்போம்

என் அறியாத வயதில் என் தாத்தாவின்அறிவுரைகள் என்னை வழிநடத்தின ... நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சிறு கிராமத்தில் தான் .....

என் தாத்தா தீவிர முருகன் பக்தர் . என் ஊரில் சிலரினை அடிக்கடி பேய் பிசாசு பிடித்துவிடும் .. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்ப்பட்டது .. பேய் என்பது உண்மையாகவே உள்ளதா .... அப்படியென்றால் கடவுள்களும் உண்மையாகவே உள்ளார்களா ?

என் தாத்தா எனக்கு சிறுவயதில் இராமாயணம், மாகபாரதம், நல்லதங்கா சரித்திரம், குறவன் குறத்தி , என பல புராண கதைகளை சொல்லி தான் இரவு பொழுதினில் தூங்க வைப்பார் ....

என் சந்தேகத்திற்காக சில தேடல்களை தொடர்ந்தேன் ..

நம் புவியில் பிறக்கும் ஜீவன்கள், அசையும் மற்றும் அசையா பொருட்கள், ஜனனம் , மரணம் .. அனைத்துமே காலத்தினை பொறுத்தே நிகழும். இது உண்மைதானே.

அப்படி என்றால் இந்த விதிமுறை கடவுளுக்கும் தானே பொருந்தும் ( நான் கடவும் என்று உரைத்தது அனைத்து மதக் கடவுளையும் தான் )

கடவுள்களால் எப்படி நினைத்த கணத்தில் நினைத்த இடத்தினை அடைய முடியும் ....

அப்படி என்றால் கடவுள் என்பவர் இந்த புவியெனும் கிரகத்திற்குள்ளே இல்லையா ...

ஒருவேளை அவள் இந்த அண்டத்திற்கு அப்பால் இருப்பாரோ .. அவர்தான் இவ்வுலகை படைத்தாரோ ..
( அப்படியென்றால் நாம் வணக்கும் தெய்வங்கள் அனைத்தும் இறை தூதுவரா .. என்ன இது ஒரே குழப்பமாக உள்ளது ..)

ஔவ்வையார் நான் அனைவரும் அறிந்த தமிழ் மூதாட்டி .. இவர் புவியில் வாழ்ந்தது உண்மை அதற்காக ஆதாரங்களும் உள்ளது .. நான் அறிந்த வரையில் இம்மூதட்டிக்கு முருகப் பெருமான் அருள் வழங்கி உள்ளார் காட்சி அளித்து உள்ளார். அப்படியென்றால் ஏதோ ஒரு சக்தி நாம் வணங்கும் கோவிலுக்கு உள்ளது என்று பொருளா?

நான் தேடிய இன்னும் சில தேடல்கள் உங்கள் பார்வைக்கு .....

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.


முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது.....

என் தேடலின் பயணம் நீண்டு கொண்டே போனது ..

நான் மேலே குறிப்பிட்ட சிதம்பர கோவிலின் வரலாறு உண்மையானது ... இக்கொவிலினை அமைத்தவர் திருமூலர் ..

திருமூலர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கான ஆதர நூல்கலும் உள்ளன...

அப்படியென்றால் கடவுளை மையமாக சொல்லப்படும் கதைகள் அனைத்தும் உண்மையா? என்ற வினாவை தாண்டி அது மனிதரின் வாழ்கை வழிமுறைகளை உணர்த்துகிறது என்பது தெளிவாகிறது.

காலப்போக்கில் சில கதைகள் தவறாக மாறி இருக்கலாம் .....

என் தேடலின் இறுதியில் சிலவற்றை உணர்ந்தேன் சான்றோரால் சொல்லப்பட்ட ஒவ்வொரு கதைகளும் தர்மத்தையும், தன்னம்பிக்கையும், பொறுமையும், போராடும் தன்மையும் மையமாகவே கொண்டே சொல்லப்பட்டுள்ளது .

நாம் அறிந்துக்கொள்ளும் கதைகள், நாம் படிக்கும் நூல், இவற்றில் சொல்லப்பட்ட விடயம் உண்மையா என ஆராய்வதை விட . நம் வாழ்வின் மேம்பாட்டிற்கு, நம் அறிவின் வளர்ச்சிக்கு உதவி பூரமாக உள்ளதா என ஆராய தொடங்கினால் நல்லது .

முயற்சி ஒன்று இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்பதும் தெளிவாக புரிந்தது. இருப்பினும் இன்னும் தொடர்கிறது என்தேடல் எதையோ தேடி... .


((( குறிப்பு : புரிதலுக்காக ஆங்கில சொற்களை பயன்படுத்தினேன் . அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் வேண்டுகிறேன் ))

நன்றியுடன்
உதயா ......

எழுதியவர் : udayakumar (6-Jun-15, 2:19 pm)
பார்வை : 264

மேலே