எல்லைகள்

பிறந்த நாள்
நினைவில் இல்லை..
இவ்வுலகம் துறக்கும் நாள்..
தெரியவில்லை..
இந்த இரண்டு "இல்லை" கள்
இடையே எனது எல்லை..
..
இதில் ..
ஒவ்வொரு நாளும் ..
ஒவ்வொரு நிகழ்வும்..
ஒவ்வொரு மனிதரும் ..
..
புது அனுபவங்கள்..
எல்லாமே ..
குருவாக..
இருள் நீக்கும்
மாயங்கள்!
..
மானிடராய் பிறத்தல்
அரிதென்ற அன்னை..
மாதவ வாழ்வு பெற்று
சொன்ன சொல்லை ..
உற்று நோக்கிட..
உலகமே கையில்!

எழுதியவர் : கருணா (18-Jun-15, 2:33 pm)
Tanglish : ellaigal
பார்வை : 523

மேலே