மழையிடம்

இரவென்றும் நினையாது
முற்றத்து குழியில்
சத்தமிட்டு முத்தமிட்டது மழை

உத்திரம் சுட்ட குளிரில்
சுருண்டிருந்த சிறகுகள், முனகலுடன்,
உரசி உறங்கிப்போயின

நனைந்துப்போன முகைகள்
விடியலில் மொட்டவிழ முடிவுசெய்து
இதழ்களை இறுக மூடிக்கொண்டன

தொலைந்துப்போன காதலுக்காக
மது சுமந்த கவிதைக்காரனும்
மரித்துப்போன காதலிக்காக
கண்ணீர் சுமந்த கவுளியொன்றும்
கலைந்திருந்தனர்
மழையுடன்

எழுதியவர் : அகிலா (30-Jun-15, 8:18 am)
பார்வை : 662

மேலே