ஒரு மணி துளி

உன் கண்ணில்
நான் கண்ட எதிர்காலம்!
உன் கரம் பற்றும் போது
கிடைத்த நிகழ்காலம்!
நம்மில்
இறந்த காலம் என்பது இல்லை,
அப்படி ஒருவேளை இருக்குமானால்
அது
என் இதயம் தன துடிப்பை
நிறுத்தும் ஒரு 'மணி துளிதான்'........................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்