கூத்தாடிகளை கொண்டாடும் காத்தாடிகளே - வைரா புதுகவிதை
கூத்தாடிகளை கொண்டாடும் காத்தாடிகளே!
அரிதாரம் பூசியவர்களை
ஏற்றியது அரியாசனம்
இந்த அறியா-சனம்
உன்னை படிக்க வைக்க வாங்குன கடன்
வட்டி மேல குட்டி போடுது - இதில
தலைவன் ஜட்டி போட்டால் என்ன
தலைவி குட்டி போட்டால் உனக்கென்ன ?
தலைவன பாக்க போனா கெட்- அவுட் - அதே தலைவனுக்கு
வைக்கிற நூறடியில கட் - அவுட்
புரட்சி நாயகர்களுக்கு இங்கு பஞ்சமில்லை - ஆனால்
என்ன புரட்சி செய்தார்கள் என்று தெரியவில்லை
பசுமை புரட்சியா ,வெண்மை புரட்சியா, நீல புரட்சியா இல்லை நீல பட புரட்சியா?
தலைவனுக்கு சிலை வைக்க குதிக்கிராயே
உன் வீட்டில் உலை கொதிக்கிறதா ?
சாதி கூடாதுன்னு படம் எடுக்கிறான் - அடுத்த நாள்
சாதி சங்கத்துக்கு தலைமை தாங்குறான்
தேசபற்று படம் எடுக்கிறான் - அடுத்த நாள்
வருமான வரியில சிக்கி தவிக்கிறான்
திரையில் காதலை வளர்த்தவன் - தன்
சொந்த மகளின் காதல மறுக்கிறான்
கொள்ளு தாத்தாவாக நடிக்க வேண்டியவன் - திரையில்
ஜொள்ளு தாத்தாவாக நடிக்கிறான்
பகுத்தறிவ போதித்து விட்டு
பக்த பிரஹலாத படமும் எடுக்கிறான்
கலை மகளாக பார்த்தவளை
விலை மகளாகவும் பார்க்க வேண்டியுள்ளது
என்ன கொடுமை
இதனையும் பார்த்து விட்டு
வேஷம் கட்டுபவர்களுக்கு
கோஷம் போடுகிறாய்
வெளிச்சம் தராத நட்சத்திரங்களை
விடி வெள்ளி என்கிறாய்
பாலாபிஷேகம் செய்து பாலாய் போனது போகட்டும்
இனி உழைத்து பிழைத்து
உன் பெற்றோரின் நெஞ்சில் பாலை வார்ப்பாயாக .....
- இப்படிக்கு வைரா