அன்னையின் சுவாசம்

நாம் எதிர்பார்க்கும் உறவு
எத்தனை இருந்தாலும் ,
நமை எதிர்பார்க்கும்
அன்பின் உறவு
அம்மா...

பிறக்கும் வரை
உனை காணத் துடிப்பாள்..
பிறந்தபின் உனை கண்டு ரசிப்பாள் ..
நீ இருக்கும் வரை ,
அவள் இறக்கும் வரை ,
உனக்காகவே இருப்பாள் அவள்...

அன்பில் தினம்
உனை அணைப்பது
அன்னை மனம்...

உயிர்வலி கொண்டபோது
கலங்காதவள்,
கண் கலங்கி நின்றிடுவாள் !!
அவள் உயிர் தந்த
உயிர் நீ
சிறு துயர் கொண்டால் ...

தோளோடு உனை அணைத்து ,
உன் தோளோடு
அவள் கை வைத்து ,
மெல்ல தட்டி
துயில சொல்லும்
அன்பின் தேசம் .....
உன் காதோடு
இதமாக கதைபேசும்
அன்னையின் சுவாசம் ....

எழுதியவர் : kavitha (23-Jul-15, 9:58 pm)
Tanglish : annaiyin suvaasam
பார்வை : 135

மேலே