Fb ல எவளோ ஒருத்தி
மனைவி:- என்னங்க! இதுவரை உங்களை நான் கூட "மச்சான்"னு சொன்னதில்ல...! Fb ல எவளோ ஒருத்தி உங்களை மச்சான்னு சொல்றாளாமே... எவ அவ?
கணவன்:- அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது! அவங்க உனக்கு "தங்கச்சி" மாதிரி!
மனைவி:- மாதிரியும் இல்ல, மாருதியும் இல்ல...! ஒரு சொந்தமும் இல்லாம ஒருத்தி உங்களை 'உறவு முறை' சொல்றான்னா..., அவளுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்!
கணவன்:- சரி! மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?
மனைவி:- தாத்தா!
கணவன்:- ஜவஹர்லால் நேருவை..?
மனைவி:- மாமா!
கணவன்:- கருணாநிதியை..?
மனைவி:- அய்யா!
கணவன்:- ஜெயலலிதாவை..?
மனைவி:- அம்மா!
கணவன்:- இப்படி உனக்கு ஒரு சொந்தமும் இல்லாத இவங்களை நீ இவ்ளோ உறவு முறை சொல்றியே...! எப்பவாச்சும் நான் உன் மேல சந்தேகப்பட்டு கேட்டு இருக்கேனா செல்லம்!
மனைவி:-?
நன்றி முகநூல்