மும்மண்டில வெண்பா
பூச்செண்டு நான்தந்தேன் பொன்மகளே நாயகியே
பாச்சரமும் யான்தொடுத்தேன் பன்னசியே ! - பேச்சினிலே
தேன்குழைத்தே இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய்
மான்விழியே தென்றலெனத் தீண்டு .
நான்தந்தேன் பொன்மகளே நாயகியே பாச்சரமும்
யான்தொடுத்தேன் பன்னசியே பேச்சினிலே - தேன்குழைத்தே
இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே
தென்றலெனத் தீண்டு,பூச் செண்டு .
பொன்மகளே நாயகியே பாச்சரமும் யான்தொடுத்தேன்
பன்னசியே பேச்சினிலே தேன்குழைத்தே -இன்னமுதம்
சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே தென்றலெனத்
தீண்டு,பூச் செண்டுநான்தந் தேன் .
இலக்கண விளக்கம்
````````````````````````````````
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!