காதல் பொல்லாதது
காதல்
கண்களால் பேசத் துவங்கி
கண்ணீரை மட்டும் பரிசாக்கி
இதயம் தருவேன் என்று
ஏமாற்றும் விளையாட்டு
காதலிக்கும் போது
உன்னை பிரிய மனமே இல்லை
என்று பேசும் உதடுகள்
திருமணத்திற்கு பின்
உன்னிடம் பேச மனமே இல்லை
என்று சொல்ல செய்யும் வேலையாள்
காதலிக்கும் போது
பெருந்தவறும் காதலால் கரைந்து விடும்
திருமணத்திற்கு பின்
சிறு தவறும் வார்த்தையால்
காதலை பிரித்து விடும்
மொத்தத்தில்
நீ விட்டு சென்ற காதலை
என் குழந்தைக்கு பெயராய் வைப்பேன்
என்று சொல்லும் காதல்
பொல்லாதது