நிலவின் வாழ்க்கை

அனைத்திலும் மாற்றம் உள்ளது

மாற்றம் இல்லாமல்

இந்த உலகில் யாருடைய

வாழ்க்கையும் இல்லை ........


ஆனால்

எந்தன் வாழ்க்கையில்

காலம் உள்ளவரை

மாற்றம் ஏதும் இல்லை.....




நான் என்றும்

செஞ்சோற்று கடனாளியாகவே

வாழ்கிறேன் இறைவா !




நான் யாசகம்

பெற்ற அன்பினை வைத்து

பொடி நடையாக

என் வானில்

உலா வருகிறேன்.....




ஆனால்

இரவில் மட்டுமே

எனது சேவை

எல்லாருக்கும் தெரியும் .....




ஆனால்

அல்லும் பகலும்

இடைவிடாது

நான் எப்போதும்

சேவை செய்து வருகிறேன் இறைவா !




ஆனால்

என் எந்த

ஜென்மத்து பாவம்

என்று நான்

எவ்வாறு அறிவேன் இறைவா !



சில நாள்

என்னை

முழு நிலவாகவும்

சில நாள்

என் மனதில் உள்ள

சோகங்களால்

நான் தேய்ந்து

வாழ்கிறேன் ....


ஆனால்

இதுவும் எனக்கு சுகம்

தான் இறைவா !


எனை பார்த்து

தாய் தன் மழலைக்கு

சாதம் ஊட்டுகிறாள் .....


என்னால் தான்

காதலர்களின் காதலும்

வளர்கிறது .....


என்னால் தான்

மின்மினி பூச்சிகளும்

தன் அழகை

தாரணிக்கு( உலகம் ) காட்டுகிறது


என்னால் கண்டு

தரணியும் ( சூரியன் )

காதல் கொள்கிறது .....


என்னால் தான்

தாரகையும்( விண்மீன் ) தாரணியும் ( உலகம் )

வாழ்கை வாழ்கிறது ....



இந்த மகிழ்ச்சி தந்த

இறைவனுக்கு

நான் அனுதினமும்

எண்ண முடியாத

விண்மீன் விளக்குகள் ஏற்றி

என் காலம் உள்ள வரை

என் நன்றியை

தெரிவிப்பேன் இறைவனுக்கு !

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (19-Aug-15, 9:10 pm)
Tanglish : nilavin vaazhkai
பார்வை : 69

மேலே