லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரியின் உறவினர் ஒருவர் வீடு தேடி வந்தார், ‘என் பையன் உங்க போலீஸ் பரீட்சையெல்லாம் பாஸ் செய்துட்டான், உயரம் கொஞ்சம் கம்மியாம், நீ சொன்னாப் போதும், செலக்ட் ஆயிடும்’
‘போலீஸ் வேலைக்கெல்லாம் இவ்வளவு உயரம், இவ்வளவு மார்பளவுன்னு ரூல்ஸ் இருக்கு, அதை எல்லாம் மாற்ற முடியாது, மாற்றக்கூடாது!’

‘நீ நாலரை அடிகூட இல்லே! நீ போலீஸ் மந்திரி. எம் பையன் ஏதோ அரை அங்குலமோ, ஓரங்குலமோதான் குறைவு. அவன் போலீஸ்காரனாகக் கூடாதா?’
சாஸ்திரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘அம்மா, போலீஸ் மந்திரின்னா இவ்வளவு உயரம் இருக்கணும்ன்னு விதிமுறைகள் எதுவும் கிடையாது. நான் மூணடியா இருந்தாலும் மந்திரியா இருந்திருப்பேன். ஆனா போலீஸ் உத்தியோகத்துக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை மாத்தக்கூடாது, அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை’
வந்தவர் சாஸ்திரியின் பேச்சில் சமாதானமானார்.

எழுதியவர் : (’மேதை’ டிசம்பர் 2008 மாத இதழ (2-Sep-15, 12:43 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 65

மேலே