எல்லாம் உன்னால்

உறங்காமல் உனக்கு
ஒரு கவிதை எழுதினேன்.

உள்ளத்தில் உள்ளதை
ஒரு கடிதமாய் வரைந்தேன்.

உலகமே நீ தான் என்று
ஒரு கவிதையில் தொகுத்தேன்.

உன்னோடு வாழ நினைத்து
ஒரு கற்பனை உலகில் மிதந்தேன்..

உள்ளத்தை உன்னிடம் கொடுத்து
ஒரு புது உலகில் நான் இருந்தேன்..

உதறியே தள்ளி விட்டு
உன் வாழ்கையை அமைத்து கொண்டாய்..

உள்ளதை சொல்ல போனால்
உன்னை போல் ஒரு பெண்..

உலகத்தில் பிறக்க கூடாது
உள்ளமே அலறுகிறது உன்னால்..

உரியவனாய் இருக்க வேண்டிய நான்
உரிமை இல்லாமல் தவிக்கிறேன்..

உள்ளம் அழுகிறது உன்னால்
உள்ளம் குமருகிறது உன்னால்..

காதல் அழிந்து விட்டது உன்னால்
கண் மூடி விடுகிறேன் உன்னால்.

மங்கலமாய் வாழ்ந்து கொள் நீ
மண்ணோடு வாழ்ந்து விடுகிறேன் உன்னால்...

மருந்து குடித்து விட்டேன் உன்னால்
மரணத்தின் விளிப்பில் நான் உன்னால்...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (3-Sep-15, 12:13 pm)
Tanglish : ellam unnaal
பார்வை : 627

மேலே