வண்ணக் கிறுக்கல்கள்

கிறுக்கிய உன்வரிகள் கவிதையா வதில்லை -----------1 
கிறுக்கிய கோடுகள் ஓவியம் ஆவதில்லை 
வண்ணங்கள் வளைந்தால் வானவில் 
வண்ணமாய் எண்ணம் விரிந்தால் கவிதை 


கிறுக்கிய உன்வரிகள் நற்கவிதை இல்லை --------------2 
கிறுக்கிய கோடுகள் ஓவியம் இல்லை 
வண்ணங்கள் வானில் வளைந்தால் வானவில் 
வண்ணமாய் எண்ணம் விரியகவி தை 


கிறுக்கிய உன்வரிகள் நற்கவிதை இல்லை ---------------3 
கிறுக்கிய கோடுகள் ஓவியம் இல்லையே 
வண்ணங்கள் வானில் வளைந்திடின் வானவில் 
வண்ணமாய் எண்ணமே பா . 

-----கவின் சாரலன் 
கவிக் குறிப்பு : ரசிப்போர் பாக்களை அடையாளம் காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-15, 4:12 pm)
Tanglish : vannak kirukkalkal
பார்வை : 485

மேலே