ஏனோ

பெண்மையை வருடும் மென்மை
உன்னிடத்தில் கண்டேன் பெண்ணே !
ஆருடம்தான் நானறியேன் ...!
எனக்கென பிறந்தவள் நீயென
நான் உணர்ந்தேன் .....!
ஊமையான உள்ளத்தை
உளற வைத்தாய் உன் பெயரை !
உயிரோடு கலந்துவிட்டு
உறவறுத்துப் போனதேனோ...!!!

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (15-Sep-15, 7:59 am)
சேர்த்தது : பெலிக்ஸ் ராஜன் .ரெ
Tanglish : eno
பார்வை : 170

மேலே