ஈக்கு என்ன வேலை- இலக்கிய சுவை
ஈக்கு என்ன வேலை?
மாம்பழக் கவிராயர் என்பவரும் ராமச்சந்திர கவிராயர் என்பவரும் நல்ல நண்பர்கள்.மாம்பழக் கவிராயருக்கு கண் பார்வை சிறிது மங்கலாயிற்று.ஒரு நாள் ராமச்சந்திரக் கவிராயர் அவரைப் பார்க்க வந்தபோது வந்திருப்பது யார் எனக் கேட்டார்.ராமச்சந்திரர் சற்று அழுத்தமாக ,''இராமச்சந்திரன் வந்திருக்கிறேன்,
''என்றார்.தமிழில் 'ர' என்ற எழுத்துடன் எந்த வார்த்தையும் ஆரம்பிக்க இயலாது என்பதால் அப்படிப்பட்ட பெயர்களுக்கு முன்னால் 'இ' சேர்ப்பது வழக்கம்.அதன்படியே அவரும் சொன்னார்.ஆனால் எழுதும்போது மட்டுமே அவ்வாறு சேர்ப்பதுண்டு.பேசும்போது சாதாரணமாகவே 'இ' சேர்க்கமாட்டார்கள்.எனவே மாம்பழக் கவிராயர்,''கவிராயரே,ஈக்கு இங்கு என்ன வேலை?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.ராமச்சந்திரரும்தனது தவறை அறிந்து கொண்டாலும் சிரித்துக் கொண்டே, ''மாம்பழம் இருக்கும் இடத்தில் ஈ இருக்கத்தானே செய்யும்!''என்றார்.கவிராயர்கள் என்றால் சும்மாவா?
நன்றி ஜெய ராஜன்