கடவுளே இருக்கிறாயா
என்னை
அறிவோடு ஏன் படைத்தாய்
அடுப்படியில் எரிவதற்கா
ஆற்றலோடு ஏன் படைத்தாய்
அழுக்கு துணி துவைப்பதற்கா
திறமையோடு ஏன் படைத்தாய்
மூலையில் முடங்குவதர்கா
அன்போடு ஏன் படைத்தாய்
அடிமையாய் வாழ்வதற்கா
என் சுயம் இழந்து சூழ்நிலை கைதியாகி சுயநல வாதிகளின் பிடியில் சிக்கி தவிப்பதற்கா.....