சீ விடு என்னை

சீ விடு என்னை !
எல்லோரும் என்னையே
பார்க்கின்றார்கள்
பகல் நேரத்தில்
இப்படியா ?

பக்கத்தில் இருக்கிறேன்
என்பதற்காக என் உடல் முழுவதும்
உன் இஷ்டம் போல விளையாடுகிறாய்...

முகத்தில் முத்தமிட்டாய் - தட்டி விட்டேன்
உதடுகளில் வழிந்து சென்றாய் - துடைத்து விட்டேன்
இப்போது மேனி முழுவதும் .....?
பார்பவர்கள் என்ன நினைப்பார்கள்.

குடையுடன் திரிந்த காலத்தில்
எத்தனை முறை என்னை ஏமாற்றி இருப்பாய் ?
இன்று வசமாய் சிக்கி கொண்டாய்
இல்லை இல்லை !
நான் சிக்கி கொண்டேன் ...

என் மீது அவ்வளவு ஆசை என்றால்
சொல்லிவிடு
தனிமையில் வருகிறேன் ...
உன் ஆசையெல்லாம் கொட்டி தீர்த்து விடு !!!

#மழை #மாலை #இசை #இளையராஜா #தனிமை

என்னா மழை

எழுதியவர் : ஜார்ஜ் (27-Sep-15, 9:37 pm)
பார்வை : 170

மேலே