நப்பாசை

காதலும் கவிதையும்
தமிழ் வீட்டின் உன்னதப் பெண்கள்..!

இருவரை மணப்பது
நியதி இல்லை என்றாலும்
மனதின் ஓரத்தில் இருக்கிறது
ஒரு நப்பாசை !

நேரங்களை மறக்கச்செய்து
சுகங்களை பெருக்கச்செய்து
சொற்பந்தலிட்டு சுகம் தரும்
இந்த இருவரையும் மணந்திட...!

உணவையும் உறக்கத்தையும்
புறந்தள்ள வைத்து
பிழையில்லாமல் எழுதச்சொல்லி
வார்த்தைகளை எடுத்துத் தந்து
முகம் காட்டாமலேயே மறைமுகமாய்
என் தமிழ் வளர்ச்சிக்கு தளமிட்ட
இந்த இருவரையும் மணந்திட... !

இருவரை மணப்பது
நியதி இல்லை என்றாலும்
மனதின் ஓரத்தில் இருக்கிறது
ஒரு நப்பாசை
இந்த இருவரையும் மணந்திட.. !.!

எழுதியவர் : க.அர. இராசேந்திரன் (28-Sep-15, 1:25 pm)
பார்வை : 293

மேலே