தோழி ஒருத்தி இருந்தால்

வயக்காட்டில் வாய்வலிக்க
வாய்பாட்டை ஒப்பியிருப்போம்
இரையெடுக்க வந்த பறவைகளை விரட்டி இருப்போம்

அவர் அவர் தோழில் தூண்டில் குட்சை சுமந்து
ஆற்றங்கரைக்கு சென்று இருப்போம்
புழுவே கோர்க்காத தூண்டில் முல்லை
ஆற்றில் போட்டு மணிகணக்கில் காத்துயிருப்போம்
மீன் மாட்டும் என கடவுளிடமும் வேண்டியிருப்போம்

பா போட தெரியாமல்
பள்ளி வாசலில் முட்டி போட்ட எனக்கு
மனற்பலகையில் பாவை கற்று தந்தாய்
நீயும் முட்டி போட்டு கொண்டு

தொலைதூர நட்சத்திரத்தை
என்னிட நினைப்பாய்
அதை சிறைபிடித்து எண்ணிட சொல்வேன்
நான் வரைந்த ஓவியத்தில்

பசியிருந்தால் சொல்லிட மறுப்பேன்
என் முகம் கண்டு அறிதிடுவாய்
வா சாப்பிடுவோம் என்று

நிலவு ஒளியில் பாய் விரித்து படுத்துயிருப்போம்
அதில் வெளிச்சங்கள் இருக்கும்
இருட்டு என்னும் எண்ணங்கள் இருக்காது

உனக்கு என்ன பிடிக்கும்
எனக்கு என்ன பிடிக்கும்
நமக்கு என்ன பிடிக்கும்
என்பது
நமக்கு தெரியும்

வாடா போடி
என்னும் வார்த்தைகளில்
சந்தோசம் இருக்கும்
தப்பாக இருக்காது

சோகம் இருந்தாலும்
முதலில் என்னிடம்தான் சொல்வாய்
சந்தோசம் இருந்தாலும்
முதலில் என்னிடம்தான் சொல்வாய்

என் அன்னைவிடவும்
என் தந்தைவிடவும்
உன்னிடம்தான் அதிகமாக பழகியிருப்பேன்
என் என்றால்
அத்தனையும் நீயாக இருப்பதால்

நம் நட்பு
பழகியவர்களுக்கு தெரியும்
அது தூய்மையானது என்று
பார்ப்பவர்களுக்கு தெரியாது

எனக்கு தெரியும்
நம் நட்பில் பிரிவு என்பது வரும்
அதற்காக
முறிந்து போயிடாது

உனக்கு வரும் கணவன்
எவ்வாறு இருப்பான் என்பது எனக்கு தெரியாது
உனக்காக ஒரு நண்பன் இருப்பான்
அது நானாகத்தான் இருப்பேன்
என்பதில் ஐயம்மில்லை

--------------------------------- கேள்வி

ஒரு காதலனாக இருந்து
கடைசி வரை கைகோர்ப்பதில்
அரிது அல்ல
ஒரு நண்பனாக இருந்து
கடைசிவரை நண்பனாகவே இருப்பதுதான்
அரிது

ஒரு ஆண் இறந்தால்
அவன் சாவிற்கு
ஆயிரம் நண்பர்கள் வரலாம்
அதுவே ஒரு பெண் இறந்தால்
அவள் சாவிற்கு
ஒரு தோழன் கூட இருப்பதில்லை

அதற்க்கு காரணம் சமுதாயம்
ஆண்களில் பல பேர்
ஒரு பெண்ணிடம் பழகும்போது
ஒரு தோழியா எண்ணுவதில்லை
அவ்வாறே எண்ணினாலும்
சமுதாயம் அதை ஏற்று கொள்வதில்லை

எழுதியவர் : காந்தி (29-Sep-15, 12:38 pm)
பார்வை : 5258

மேலே