இதயம் எந்திரம் இரவில் மந்திரம்
இதயம்
சாவி தொலைக்கப்பட்ட
பூட்டு...!
இமைகள் -
விரும்பும் வரை தானாக இயங்காத கதவு,
விழிகள் -
தூக்கம் வந்தால் தானியங்கும் கதவு.
இருந்தும் துயிலும் சில வேளை தடைபடும்,
இதயம் வேலை நிறுத்தம் செய்கையில்.
கனவு வழிந்திடும்
இமைகள் மூடியும்.....!