கவிதை கேளுங்கள்

அன்பே..
என் கவிதைகள் படி..
என் கோபங்கள், ஆசைகள்,
கனவுகள், ..இன்னும்
புரையோடிப் போன புண்கள்
அவற்றின் வலிகள்..
ஏமாற்றங்கள்..வெற்றிக்களிப்புகள்..
தெரிகிறதா என்று பார்..
எங்கேனும் அவற்றில் ஒளிந்துள்ள
எனது அந்தரங்க ஆசைகள்....
ஏக்கங்கள்..நிம்மதி பெருமூச்சுகள்
எல்லோரிடமும் நான் காட்டும் அன்பு..
உன்னிடத்தில் உள்ள பிரத்தியேக பிரியம்
இவைகள் கூட தெரியலாம்..
உற்று நீ கவனித்தால்..
இவை எதுவும் தெரியவில்லை என்றால்..
ஒன்றும் இல்லை..
கவிதைகள் படிக்கும் வழக்கத்தையாவது
நிறுத்திக் கொள்..
குறைந்த பட்சம் ..
என்னுடையவையாவது!

எழுதியவர் : கருணா (9-Oct-15, 8:44 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : kavithai kelungal
பார்வை : 195

மேலே