என்ன பெயர்
என்ன பெயர் ?
நீரில் மிதக்கும் பூவென
என் நினைவுகளில் எப்போதும்
மிதந்து கொண்டிருக்கிறாய்.
ஆலமரத்தின் ஆணிவேரென
அடிநெஞ்சில்
பிடுங்க முடியாதபடி
வேர் விட்டிருக்கிறாய்.
காற்றில் மிதக்கும்
சருகென இல்லாமல்
பறவை என
என்னுள் சிறகசைக்கிறாய்.
ஈயென இல்லாமல்
வண்டென மொய்த்து
ரீங்கரிக்கிறாய்.
ஊதுபத்தி வாசனைஎன
என் நினைவுகளில்
சுகந்தம் பரப்புகிறாய்.
அவ்வப்போது என்னைப்
பித்தன் ஆக்குகிறாய் .
சிலர் கிண்டலுக்கு
ஆளாகி விடுகிறேன்.
தூக்கத்தில்
கொசுவாய் வந்து கொட்டாமல்
கண்ணாமூச்சி விளையாடுகிறாய்.
துரத்துவதை
தொந்தரவாய் நினைக்காமல்
லயித்துக் கிடக்கிறேன் பார்.
இந்த ரசவித்தைக்கு
என்ன பெயர்?
நீதான் சொல்லேன்.