சிதறல்கள்

உதிராத இலையின்
நுனிகளில் உதிர்கிறது
காணும் விழி
-----------------------------
திரும்பிப் பார்ப்பதில்தான்
திரும்ப திரும்ப
திரும்புகிறது திரும்புதல்
------------------------------------
கிழிசல்
புடவைக்குள்
தாவணி இருக்கிறது
------------------------------------
அடித்து எழுதிய
வரிக்கு
அடுத்த வரி அழகு
-----------------------------------
கடைசியாக
பார்த்தவன்
கடைசி வரை அழுகிறான்
கவிஜி