ஏழு இலட்சம் பெண்கள்

ஏழு இலட்சம் பெண்கள்
இத்தலை நகரில்
தனியாக வாழ்கின்றார்கள்
அவர்களின் அகவையோ
இருபதில் இருந்து
நாற்பது வரையாம்;
திருமணம் ஆகாமல்,
விவாகரத்து செய்து,
அல்லது அன்னையராய்
பெற்ற பிள்ளைகளுடன்!

.ஏழு இலட்சம் பெண்கள்!
ஓ ஆணே,
கடந்த நாலு மணி நேரம்
கணிணி முன் அமர்ந்து
நீ உன்னையே துபுறுத்திக்
கொண்டு இருந்தாய்—
பெண்கள் இல்லாத வாழ்வின்
சிரமங்களை வெளிக் கொணரும்
ஒரு வாக்கியத்தை இந்தப்
பாழுங் கவிதையில் சேர்த்திட!

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (27-Nov-15, 4:04 pm)
பார்வை : 79

மேலே