இது எங்க ஏரியா உள்ள வராத

அறிவுரை கூற எனக்கு
வக்கு இல்லை
ஏன் எனில் நானே
அவற்றை பின்பற்றுவதில்லை
இருந்தும்
கூறிவிடத்தான் வேண்டும்
என் தோழிக்கு அன்புரை.....

ஆராத வடு (அவரவர் வாழ்க்கை காயங்கள்)
மனதில் இருந்தாலும்
முகத்தில் மறைத்து
ஆறுதல் உரைத்திடத்தான்
வேண்டும்
தோழிக்கு.....

அவள் சந்தோஷம்
என் சந்தோஷமானது.....
என் சோகம்
அவள் சோகம் ஆனது....

வீழும் வரை
காத்திருப்பதில்லை அவள்
என்னுடனேயே
வருகிறாள்
போர்க்களத்தில்
எனக்கு முன் நின்றிட.....

முகம் மலரும் போது
வருவது உறவு..
அகம் அழும் பொழுதும்
வருவதே நட்பு.....

~ எங்க நட்பு (SJP)

எப்புடி நாங்களும் யோசிப்போம்ல 👊👍

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Feb-16, 1:11 pm)
பார்வை : 215

மேலே