எனக்காக பிறந்தவளா 11

Episode 11 : எனக்காக பிறந்தவளா ???

வசந்த் மனதில் காதல் இடைவிடாமல் ஒடிக்கொண்டிருந்தது . மொட்டை மாடியில் காதலியை நினைத்துக்கொண்டு இரவு காற்று வாங்குவது ஒரு ஆழகான கனவுபோல் இருந்தது . காதல் தோட்டதில் நிலவு போல் மைதிலி அவன் மனதில் ஒலிவட்டமாக தெரிந்தால் . அவள் நினைவுகள் எங்கும் நட்சத்திரகூட்டமாக அவன் சிந்தனையில் நிறம்பிக்கொண்டிருந்தது எண்ணமுடியாமல் .

கீகீக் என்ற சத்தம் ஒளித்தது, முதல்முறை கேட்டதில் ஆர்வம் வெளிபடவில்லை .மறுபடி இன்னோறு முறை கீகீக் என்றது, அவன் காதுகளை திருவியது போல் கேட்டது . வசந்த் மேல்புற சுவரில் இருந்து ஏட்டி பார்த்தான் . ரவியும் , நவீனும் அவனுக்கு கைகாட்டி சிரித்தார்கள் . வசந்த் வேகமாக படிகளை கடந்து வீட்டிற்குள் நுழைய அவர்கள் வீட்டின் முன்கதவை அடைந்து இருந்தார்கள் .

"வா மச்சி என்னடா இந்த நேரதுல என்ன matteru" வசந்த் .
"திருப்பதி போலாம்னு இருக்கோம் வா போலம்" ரவி .
"டேய் ! இது எப்ப எடுத்த முடிவு டா "
" Just half hour back " நவீன் .
"அதுக்கு இப்படி போசுக்குனு வந்து கூப்டா நான் ready ஆகதேவயில்லயா" வசந்த் .
" நீ எதுவும் எடுக்க தேவயில்லா உனக்கு தேவையானது எல்லாம் நாங்களே எடுத்துனு வந்துடோம் " நவீன் .
"நீங்க வந்தா மட்டும் போது " ரவி சிரித்துக்கொண்டு .
" அம்மா . . . . அம்மா '
" என்ன வசந்த்" துக்கதில் அம்மா .
"அம்மா, திருப்பதி போறோம் நாளைக்கு வந்துருவோம் " .
" என்ன வசந்த் எதுவும் சொல்லவேயில்ல "
" எனகே தெரியாது அம்மா, நவீனும், ரவியும் வந்து இருக்காங்க கூப்புடாறங்க "
" சரி பா, பாத்து போங்க "

ரவியும், நவீனும் bike-ல் firstgear-ல் இருந்தார்கள் .வசந்த் வேகமாக வந்து மூன்றாவது ஆளாக எரிக்கொள்ள வண்டி வேகம் பிடித்தது . இரவு சாலையில் எந்த கூட்டமும் இல்லை சமந்தாமில்லாமல் சில லாரிகள் மட்டும் அழுக்கு போர்வையில் எதை எதையோ சுமந்து கொண்டு உருண்டது . ரவியின் bike ஓட்டும் தன்மைக்கு எந்த விளக்கமும் தரமுடியாது என்று அவன் driving-ஐ இடுகடியிலும் வசந்த் ரசித்துக்கொண்டான் .
காதுகள் இரவு பனியில் குளிர்ந்தது .
"டேய் ! என்னடா losse மாறி night 12க்கு வந்து திருப்பதி போனும் கூப்டுறிங்க" வசந்த் .
" நாது திருப்பதியா ? என்னடா நான் போற root ah- பாத்த திருப்பதி போற மாறிய இருக்கு ? " ரவி .
"வேற எங்கடா ?"
"சரக்கு "
" பாண்டிசேரியா ?" என்னடா இப்படி இறங்கிடீங்க ?"
"பேசாம வா நீ" ரவி .

வண்டி-i இன்னும் வேகபடுத்தினான் . புது நகரம் வந்தது மேகங்கள் புது பொலிவுடன் இருந்தது . சாலை சுத்தமாக இருந்தது . ஒரு நீல பலகையில் பாண்டிசேரியின் கீழ் 0.5KM என்று எழுதப்பட்டு இருந்தது . வசந்திற்க்கு இன்பமாக இருந்தது . ஆனால் துக்கம் அவனை சோர்வாகியது .
"என்க stay பண்றது, tried ah இருக்கு first துங்கனும் " வசந்த் .
"ஏன்டா வண்டி ஓட்டினு வந்தது நானு உனக்கு tried ah இருக்கா ?" ரவி .
" என்டா மணி 4 ஆச்சு full nyt துங்கல tried இருக்காத" நவீன் .
" ok , இரு டேவிட்க்கு call பண்ற " நவீன் .
நவீன் mobile-ஐ இருமுறை காதில் வைத்து வைத்து எடுத்தான் . தலையை சொரிந்துகொண்டு " மச்சி தூங்குறான் போல wait பண்ணலாம் " .
" ச்!" முதலில் வசந்த் பின் "ச்!" ரவி .
" சரி வா போலாம் விடியபோது கொஞ்ச நேரம் டீ குடிச்சுட்டு அப்பறம் call பண்ணலாம் " .

டீ கடை ஒன்றில் இதமாக டீ குடித்தார்கள் . ரவியும் நவீனும் புகைப்பதை எப்பவும் போல் பிஸ்கட் கடித்துக்கொண்டு பார்த்தான் வசந்த் . நினைக்காத இரவு , புதுமையான பயனம் நண்பர்களின் அன்பு, சிரிப்பு எல்லாம் வசந்தை சிரித்துக்கொண்டே நகரதை ரசிக்க செய்தது . மைதிலியின் நினைவுகள் அவனிடம் இந்த தருணதில் குறைந்து இருந்தது . கூட்டம் கூட துவங்கியது . மக்களின் முகம் புதுமையாக இருந்தது . நகரம் வெளிச்சத்தில் அழகு கூடியது .

Bike -ல் மீண்டும் புறப்பட்டது . பல் தேயித்துக்கொண்டு , ஒரு பாக்கேட் நீரை முகத்தில் தெளித்துக்கொண்டு இரவு தூக்கத்தை மறந்திடும் அளவிற்க்கு இரவு வாணம் முழுவெளிச்சம் பெற்றது .வீடுகளின் கட்டமைப்புகள் கண்களை கவர்ந்தது . சில ஒளி கதிர்கள் இரவு இருட்டை விரட்டிக்கொண்டு இருந்தது . ஒரு வித அலை சத்தம் காதுகளில் கேட்பது போல், மெல்லிய இசை நகரை சுத்திக்கொண்டு இருந்தது . இவைகளுடன் நகரின் இயற்கை இனைந்து அவனுக்குள் ஒரு நல்ல உணர்வை ஏற்படுதியது .

" மச்சி இதான் வீடு, உள்ள பாசங்க தூங்கினு இருகாங்க போல வா " நவீன் .

வசந்தால் பதில் சொல்வதற்க்கு கூட முடியவில்லை சோர்வில் .அமைதியாக வீட்டின் முன்கதவு வரை நடந்தான் . மார்பில் மூடியுடன் ஒருவன் கதவையும் வாய்யையும் திறந்தான் .

வசந்திற்க்கு தூக்கம் தாங்கவில்லை . அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் வசந்த் தன்னை ஒரு சிரிப்புடன் முதல் அறிமுகம் செய்துக்கொண்டான் .

" Boss tried ah இருக்கோம், night தூங்கவே இல்ல " வசந்த் .
" சரிங்க boss bed la படுத்துக்கோங்க " என்று வழிகாட்டினான் .

" சே ! மச்சி mobileல மறந்துடு வந்துடன் டா " வசந்த் .
" நிஜமாவ! அப்பா இப்பதா எனக்கு நிம்மதியா இருக்கு " ரவி .
" டேய் ! மைதிலி call பண்ணுவடா " .
" டேய் நீ இன்னும் தூங்க போலையா, போ உன் mobile-ku ஒன்னும் ஆகாது " நவீன் .
" மைதிலி டா "
" மைதிலிக்கும் ஒன்னும் ஆகாது , போயி தூங்கு " நவீன் .

வசந்த் bed-ஐ நோக்கி நடந்தான் தூக்கதொடு . .

தொடரும் . . .

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (17-Feb-16, 10:49 am)
பார்வை : 241

மேலே