லெனின்-வெண்பா

சீரிய சிந்தையும் தேர்ந்த மதியுமே
கூரிய வாளென கொள்பவன் - பாரினில்
நேரிய கொள்கை நிறைந்த தெளிவுடனே
காரியம் ஆற்றுவா னாம்...!

நெஞ்சுரம் கொண்டதோர் நேசத் தலைவனாம்
அஞ்சிடா உள்ளமும் ஐயமிலா எண்ணமும்
வஞ்சகம் கொண்டதோர் வர்கத்தை நோக்கியே
மிஞ்சியே மீட்டும் குரல்...!

-வெண்பா

எழுதியவர் : (27-Feb-16, 11:17 pm)
Tanglish : lenin
பார்வை : 92

மேலே