முட்டையிடும் மனிதர்கள் - என் கனவு

முன்னம் ஒரு காலத்தில் இருந்த
மனிதன் ஒருவன் முட்டையொன்று இட்டான் - அந்த
முட்டை பொரித்தது! பிறந்தது ஒரு அழகிய பறவை;

இறக்கைகளற்ற அந்தப் பறவை
கால்களில்லாத சிலந்திகளைப் போல
காட்சியளித்தது வேடிக்கையே;

அந்தச் சிலந்திகள் விரைவில் முட்டையிட்டன,
சிலந்தி முட்டைகள் ஓர் நாள் பொரித்தன,
அங்கே முட்டையிடும் மனிதர்கள்!

கண் விழித்துப் பார்த்தேன்,
அங்கே சிலந்திகளும் இல்லை,
முட்டையிடும் மனிதர்களுமில்லை,

இவையெல்லாம் என் கனவு!

Ref: poem 'Men That Lay Eggs' by Poet Richmoo silverstein

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-16, 8:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 148

மேலே