பழமொழிகளும் சொலவடைகளும் - உ வரிசை



உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடையவன் இல்லாதது ஒரு மொழந்துண்டு.
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம்.
உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது.
உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
உரம் ஏற்றி உழவு செய்
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
உலோபிக்கு இரட்டை செலவு.
உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.
உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?
உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 7:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

மேலே