பொறமை தீயில் நீ விழுந்தால்

கலியுகத்தில் மாந்தர்கள் இடையே தீப்பொறி போல
அலை பாய்ந்து கொண்டு இருக்கும் பொறமையே !
மனிதனின் வளர்ச்சிக்கு துணை புரியும் நீயே
இறப்புக்கு காரணமாக வருவது ஏன்?
கற்றுக் கொள்ள துணையாக இருக்க வேண்டிய நீயே
மனிதனை விழுங்க துணை புரிவது நியாயமா ....
மாந்தர்களின் மனங்களில் பாவச் செயல்களை
தூண்ட வைக்கும் பொறமையே..
உன் தீ காயத்தால் எத்தனை மாந்தர்கள் வாழ்வு
இருளில் முழ்கிப் போய் இருக்கிறது உனக்கு புரியுமா ?
காரணம் இன்றி வரும் பொறாமையே
மாந்தர்களை தீங்கு செய்யாது ஒதுங்கிக் கொள்
நீ குறுக்கே வருவதால் உடைவது மனித வாழ்வு
மட்டும் இல்லை நல்ல உறவுகளின் நட்பும் அல்லவோ !
மனமே பொறாமைச் சிந்தனை கொள்ளாது
தெளிவான சிந்தனை கொண்டால் வளமான வாழ்வு வாழலாம்
பொறமை தீயில் நீ விழுந்தால் அது உன் வாழ்வை கொன்று விடும்

எழுதியவர் : கலையடி அகிலன் (6-Apr-16, 3:32 am)
பார்வை : 80

மேலே