காதலிகள் தேவை

கவிதைகளை காதலிக்கும்
கவிதாயினியாய்...
என் கவிதைகளை
குப்பைகளென சொல்லும்
காதலி வேண்டும்...
முன்பு ஒருநாட்களில்
நிகழ்ந்த எல்லாவற்றையும்
பின்பு ஒருநாட்களில்
நினைவுப்படுத்துகிற
காதலி வேண்டும்...
கோடை வானங்களில்
வானவில்லாய்
வண்ணங்களாய்
வாசங்களாய்
அள்ளித் தரும்
காதலி வேண்டும்...
மழைக்காலங்களில்
மஞ்சத்தில் கட்டிப் புரண்ட
களைப்பு தீர
உதடு தரும்
காதலி வேண்டும்...
நத்தமும் முத்தத்தோடு
இடைவிடாமல்
இறக்க விரும்பும்
காதலி வேண்டும்...
நதியோரம்
யாழிசை மீட்டியது போல்
நாளும் நற்புன்னகை வீசும்
காதலி வேண்டும்...
இசையோடு இசையும்
இலகுவாக
இலக்கியம் பேசும்
காதலி வேண்டும்...
நடுவானில் நடமாடும்
நிலவோடு
கதை பேசும்
காதலி வேண்டும்...
கவிதையெனும்
ஆயுதத்தோடு நிற்கும்
என் பாரத்தை குறைக்க
ஆயுதம் பறித்து
பூ கொடுக்கும்
காதலி வேண்டும்...
ஊடலில் தொடங்கிய
கூடல் முடிந்தப்பின்
மீண்டும் ஒரு ஊடல்
செய்யும்
காதலி வேண்டும் ...
பின்குறிப்பு : இவையெல்லாம் இருந்தும்... பிறர் காதலியாய் இல்லாதிருத்தல் நலம்...