மெழுகுவர்த்திக் கவிதைகள்

மீண்டும் மீண்டும்
முளைக்கும்
ஒரே வினாக்கள்
விடைகள் மட்டும்
விடைகள்அறியும்.
********************
இயல்பாக பேசியவையும்
இடையில்
சுவர் எழுப்பியபின்
பேசியவையும்
இப்போது இந்த
மனதில்
உரையாடிக்
கொண்டிருக்கின்றன.
**************************
எப்போதும் போலவே
உன் வாசல்தேடி
வர விளைகிறேன்
அப்போது எல்லாம்
இயல்பாக பேசிய நீ
இப்போது ஏன் இறுகத்
தாளிட்டுக் கொள்கிறாய்.
எப்போதும் நான்
எதையும் காவிச் செல்லாத
வெறும் காற்றாகவே
இருக்கிறேன் நீ மட்டும்
கதவாகவில்லை.
**********************
கோபம் கொண்டு
மோதிக் கொள்ளும்
சிறு நதியே
உன் மீதான என்நேசங்கள்
தவறிப் போவதும் இல்லை
தவறாகப் போவதும் இல்லை
அதனால்..
உன்அலைக்கரங்களில்
இருந்து விலகி
சிறு மணல் திட்டாய்
தனித்திருப்பேன்
நீ ஓடிக்கொண்டிருக்கும் வரைக்கும்..
******************************

எழுதியவர் : சிவநாதன் (17-May-16, 10:19 am)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே