கண்ணீர் சிந்தும் முகில்கள்

பணக்காரர்களுக்குதான் தேவை
வீட்டுப் பாடம்ப்
ஏழைகளோ தினம் பெறுகிறார்கள்
அனுபவப் பாடம்

ஏழைகள் படும் பாட்டினை
எடுத்துரைக்க ஏன் இல்லை
ஒரு ஏழைத்தலைவன்?

இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளதான்
சர்வதிகாரிகளுக்கு மனமில்லை

முகில் சிந்தும் கண்ணீரை விட
ஏழைக் கண்கள் சிந்தும் கண்ணீர்தான்
இந்த கடல் நீர் யாவும்...

பிறப்பில் தொடங்கி மரணம்வரையில்
பசியோடும் பட்டினியோடும்
நினைத்த எதையும் முழுமையாய் பெறாமல்

சூழ்ச்சி வலைக்குள் சிக்கிய
சூழ்நிலைக் கைதிகளாய்க்
அடிமைபட்டு அடைபட்டு
தனக்கான வாழ்வை தினம்
பிறருக்காக தானம் செய்து
கவனிக்கப்படாத வேர்களாய்
மண்ணில் புதைந்திருக்கும்
ஏழைவிவசாயிகளுக்காக
காலம் தவறாமல்சிந்திய
கண்ணீர் சிந்திய முகில்களும்
பணக்காரர்களோடு -இன்று
கைக்கோர்த்துக் கொண்டது போலும்...

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 11:24 am)
பார்வை : 63

மேலே