பாரதி

பாரதி

உனக்கு ஞாயிறு முகம்
உந்தன் ஞானவரிகளில் தெரிகிறது
உந்தன் உதிரத்தின் வேகம்
உள்ளம் உதிர்த்த பாடல்களில் தெரிகிறது
வெள்ளொளி வீசும் தலைபாகையால்
வெளியில் வர மறுக்கிறதே
வானத்து நிலவும்-இது
முறுக்கு மீசையா
இல்லை
முரட்டு காளையின் கொம்புசீவலா
இரவு போல் அணிந்த ஆடை
இனிய வறுமையை மறைக்கவா?

எழுதியவர் : சே.மகேந்திரன் (13-Jun-16, 7:00 pm)
Tanglish : baarathi
பார்வை : 245

மேலே