உன்னைப் பிடித்திருந்தது

உன்னைப் பிடித்திருந்தது
****************************************
உனக்கு நினைவிருக்கா ம்ம்
உன்னை பிடித்திருந்தது
காருக்குள் மைலாஞ்சி இட்ட
உன் கைகளால்
என் உள்ளங்கைகளை
கெட்டியாக கோர்த்தபோது
உன் கண்களும்
என் கண்களும்
நெருக்கமாக சந்தித்தபோது
இன்னொருமுறை
அந்த அறையில்
உன் முதல் கண்ணீர்த்துளி
தரை விழுந்தபோது
அப்பொழுதுதான்
உன் முதல் வார்த்தையை
என்னிடம் துளிர்த்தபோது
உன்னை பிடித்திருந்தது
ஓடி தூணிற்குப் பின்னால் சென்று
மறைந்தவளை
இடுப்போடு சேர்ந்து அணைத்தபோது
உன்னை பிடித்திருந்தது
என்னை படுக்கைமேல் தள்ளிவிட்டு
வயிற்றில் ஏறி இருந்து
பளார் பளார் என்று
அடித்து என் திமிர் நசித்தபோது
உன்னைப்பிடித்திருந்தது
பெண் பார்க்கும் நிகழ்வுபோல
அந்த ஒரு வேகநொடிக்குள்
உன் பார்வைப்பட்டு கிறங்கியபோது
உன்னைப் பிடித்திருந்தது
உறங்கிடும் போது
உனக்கு மடிதர நான்வேண்டும்
உறங்கியப்பின்பும்
உன் கனவுகளில்
நான் மட்டுமே உன்னோடு
டூயட்பாட வேண்டும் என்றபோது
உன்னைப் பிடித்திருந்தது
ஆனால் அதே இன்று
என்னிடம் கூட
நீ பகிர விரும்பாத
உன் அழுத்தத்திற்கு
ஆறுதல் தருகிற அருகதையற்றவனாக
உன்னுடன் பயணிக்கிறேன்
உன் நினைவுகளின்
எஜமானனாக பயணிக்கிறேன்
உனக்கு ஏதும்
செய்யமுடியாதவனாக பயணிக்கிறேன்
இன்று உன்னோடு பேசியபோது
நீ மூன்று முறை அழுதாய்
உன் கவலைகளுக்கு
தீர்வுசொல்ல
நான் இருக்கேன் என்று
உரிமை எடுத்து சொல்லக்கூட
இயலாதவனாய்
எல்லாமே சரியாகும் என்ற
நம்பிக்கையோடும்
குற்ற உணர்வோடும்தான்
உன்னுடன் பயணிக்கிறேன்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (14-Jun-16, 11:10 pm)
பார்வை : 110

மேலே