லூசு டி நீ

நீ மரியாதை தராமல் பேசும் போது தான்
மனதிற்கு இதமாய் இருக்கிறது

ச்சீ போடி
லூசு

நினைத்து நினைத்து
தனியாக உட்கார்ந்து
சிரிக்கிறேனடா

உன் முகம் பார்க்கையில்
எனை மறக்கிறேனடா
உன் புகைபடம் பார்த்து
தனியாக பேசிக்கொள்கிறேனடா
என் தலையணையை
நீ என நினைத்து கட்டிக்கொள்கிறேனடா

உனை முதல்தடவை பார்க்கும் பொழுதே
தோன்றியதடா
நீ தான் என் கணவன் என்று...
உனக்கும் அதுபோல் தோன்றியதாடா...

நான் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை
யாவும் நீயாகி நிற்கிறாய்

இருள் என்றால்
முன்பெல்லாம் பயமுண்டு
இன்று உனை நினைக்கிறேன்
மனதில் ஒளியாகிறாய்

நேரம் காலம்
யாவையும் மறக்கிறேன்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கையில்
பிரியும் நேரம் வரும்பொழுது
இன்னும் நீளக்கூடாதா
இப்பொழுது
எப்பொழுதும்
என்று தவிக்கிறேன்

WhatsApp Facebook Email
எல்லாம் நம் காதலின் தூதுவர்கள்
அவர்களுக்கு ஓய்வென்பதே கிடையாது

நான் வெளியே
தனியாக சென்றாலும்
என்னுடனே பயணிப்பாய்
கைபேசியில்

சாப்பிட்டாயா
தூங்கினாயா
பாத்து போய்ட்டு வா
என்றே சொல்லுவாய்
அதற்கு தான் என் இதயமும் ஏங்கும்
ஆனாலும் காட்டிக்கொள்ளமாட்டேன்
உன்னோடு செல்லசண்டை போட்டுக்கொண்டே இருப்பேன்

என் இதயம்
வேகமாய் துடித்திட்டால்
பதட்டமாய்
இருக்கிறது
உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று.
உன்னையே அணுதினமும் நினைக்கிறேன்
நீ சாப்பிட்டாயா
தூங்கினாயா
என்று சாப்பிடாமல்
தூங்காமல் யோசிக்கிறேன்

காலையில் எழுந்ததும்
முதலில் பார்ப்பது உனை தான்
முதலில் பேசுவதும் உன்னோடு தான்
இரவு தூங்க போகும் முன் பார்ப்பதும் உனையே
கனவிலும் நீயே
அருகிலும் நீயே
மனதிலும் நீயே
என் ஆவியிலும் நீயே

நீ எங்கே சென்றிருந்தாலும் என் அருகில் தானடா இருக்கிறாய்.
உனை பார்த்து நிறைய பேசிக்கொண்டே இருக்கிறேன்.
யுகங்கள் கரைகிறது நிமிடங்களாய்
கணவா
இது கனவா
நிஜமா
பிரித்துபார்க்க முடியவில்லையடா
எல்லாமே எனக்கு நீதானே

நேரில் கேட்க
வெட்கமாய் இருக்கிறதடா
உன் புகைபடத்தை
பார்த்து கேட்கிறேன்
எங்கே எனது முத்தமடா
அங்கிருந்து வரவில்லை என்றால் என்ன
நான் தருகிறேனடா

உயிரும்
உடலும்
உணர்வும்
உனையே சுவாசிக்குமடா


நீ மரியாதை தந்து பேசினால் மனது வலிக்கிறதடா

ஏதோ எனை
பிரித்து பார்ப்பது போல் இருக்கிறதடா
எனை விட்டு தூரம் செல்வது போல் இருக்கிறதடா

நீ மட்டும் இன்னொரு முறை
மரியாதை கொடுத்து பேசினாய் எனில்
நான் செத்தே போய்விடுவேனடா

தனியாக உட்கார்ந்து அழுகிறேனடா
உன்னால்

உனக்கு பாரமாகிவிட்டேனோ
உனை கஷ்டப்படுத்துகிறேனோ
என்று பயமாய் இருக்கிறதடா


உன்னிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை எனில்
நெஞ்சு வெடிக்கிறதடா

உன் பாரா முகம்
எனை கொல்லுதடா

எதிர் எதிர் துருவங்களாய்
நின்றிடுவோமோ
நினைக்கும் பொழுதே தலை சுற்றுகிறது

என்னடா
என்ன பிரச்சனை
எதுவாக இருந்தாலும்
சொல்லிவிடுடா

நான் தான் காரணம்
என்றால் எனை
எவ்வளவு வேண்டுமானாலும்
அடித்துக்கொல்லடா
ஆனால் பேசாமல் மட்டும் இருந்துவிடாதேடா

கோபம் வந்தால் கையால் பேசிவிடு
வார்த்தையால் பேசிவிடுடா

ஏ லூசுடி நீ

நான் ஆஃபிஸ்(Office)
வேலையா இருந்தன்டி
அதனால தான் உங்கூட Time Spend பண்ணல.


இவ்ளோ தானடா
எனக்கு இப்ப தான் உயிரே வந்துது.
இன்னொரு தடவ இத மாதிரி பண்ணன உத வாங்குவ.
எவ்ளோ வேலையா இருந்தாலும் Tension ஆ இருந்தாலும் வீட்டுக்கு வந்துட்டா.அத பத்திலான் மறந்து Familyயோட சந்தோஷமா உக்காந்து பேசணும்...

ம்ம்ம் சரிடி...

சரி என்னவேணும்டா...

~ பிரபாவதி வீரமுத்து

****************************

நீ வந்தால் நான் வாழ்வேன்
நீ போனால் உன் மடி
சாய்வேன்.

உன்னை காணாது
கண்கள் மூடாது
வந்துவிடடா
தள்ளாடுகிறது உடல்
திண்டாடுகிறது உயிர்

அப்பாடா வந்துவிட்டாயா
அருகில் வாடா
டேய் உடம்ப பாத்துக்கோடா
என்று சொல்லிக்கொண்டே விழுந்தேன் என்னவனுள்

~ பிரபாவதி வீரமுத்து

****************************

குறுஞ்செய்தி என் உயிரை சுமந்து வருகிறதடா
உன்னில் கரைய
உனை பார்க்க வேண்டும் போல் உள்ளதடா Skypeல் வாடா
மாமா வேலைலாம் Easy யா இருக்கா.
ஒன்னும் கவல படாதீங்க நான் உங்க கூடவே தான் இருக்கன்.
உங்களால முடியுங்க.

நீங்களே பாருங்களேன்
எங்கிட்ட வந்து நான் முடிச்சிட்டன்டினு பெருமையா சொல்லுவிங்க.

நான் உங்கள கட்டிபிடிச்சி உச்சி முகருவன்.

****************************

என்னங்க எனக்கு
எவ்ளோ பெரிய அங்கீகாரம் கெடச்சாலும்
உங்களோட
பாராட்டு தான் முக்கியம்.
அதுக்கு ஈடு எதுவுமே இல்ல மாமா

அட்டை போல் என்னில் ஒட்டிக்கொள்ளடா
நான் உயிரோடு உன்னை அரவணைத்த படியே ஜீவ சமாதி அடைவேனடா உன்னுள்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Jun-16, 10:04 pm)
பார்வை : 646

மேலே