என் புன்னகை

இருள் சூழ்ந்த கருமேகமாய்
என் நெஞ்சத்தில்
துன்பம் சூழ்ந்ததடி ..

இடியும் மின்னலுமாய்
நீ கொடுத்த
வலியும் வேதனையும் வந்து சேர

மழைத்துளிபோல் உதிரம்
இரு வெள்ளைத்துளியாய்
என் கண்களில் உதிருதடி ..

இது அவ்வப்போது வந்துபோக
தினம் இரவிலும் துன்பம்
என் தூக்கம் கலைக்குதடி..

இக்கரிய இரவில்
வெள்ளைநிறத்திலொரு நம்பிக்கை
என் இதயம் இயங்க வைக்குதடி ..

கவலை கடந்து
காலை விடிந்ததும்
ஒளி வீசும் சூரியன்போல்
என் முகம் புன்னகை கொள்ளுதடி ..

இவ்வானத்தில் இது எத்தனையாவது சூரியனோ?
என் முகத்தில் இது எத்தனையாவது புன்னகையோ?

இது நீடிக்குமா? நிலைக்குமா?

இது நீடிக்கும்
அடுத்த கருமேகம் தீண்டும்வரை

இது நிலைக்கும்
அடுத்த இரவு காணும்வரை

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (21-Jun-16, 7:00 pm)
Tanglish : en punnakai
பார்வை : 112

மேலே