vinoth srinivasan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vinoth srinivasan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 589 |
புள்ளி | : 178 |
மாலை சூரியன் மங்கும்
இரவு மெல்ல பகலை விழுங்கும்
எங்கும் இருள் இருள் இருள்
அந்த நடுநிசியில்
நித்திரையை நெடுந்தொலைவில் நிறுத்திவிட்டு
என் விழிகள் மட்டும் விழித்திருக்கும்
எண்ணங்கள் என் விறல் பிடித்து
அங்கும் இங்கும் அழைத்துச்செல்லும்
இன்னும் திருந்தச்சொன்னால்
எண்ணங்கள் என் கழுத்தை பிடித்து
அங்கும் இங்கும் இழுத்துச்செல்லும்
இப்படியே என் இரவு கழியும்
மெல்ல மெல்ல காலை புணரும்
உலகிற்கு விடிந்தது
இன்னொரு அழகிய காலை
எனக்கோ முடிந்தது
இன்னொரு உறங்கா இரவு...
பழைய நானும்
புதிய நானும்
சந்தித்தபோது...
காணாமல் போயிருந்தது
உண்மையான நான்.
மெல்ல மெல்ல
நாய்க்குட்டி ஒன்று
சாலையை கடக்க..!
வேகமாகச் செல்ல
எத்தனித்த கார் ஒன்று
க்ரீச்ச் என்று நிற்க..!
உயிர் பிழைத்தது
மனிதம்...
இறந்த காலத்தின் காகித பிரதிகள்...
கரையும் மணித்துளிகளில் நகல்கள்...
கண்கள் எழுதும் கலர் கவிதைகள் ...
வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தருணங்களின்
காட்சித் தொகுப்பு ....
வையத்தோடு விழிகள் கொண்ட காதலின் சின்னம்....
உறைந்த காலம் சொல்லும்
மௌன சிறுகதைகள்....
எதிர்காலத்திற்காக சேகரிக்கப்பட்ட
நிகழ்கால வண்ணத் துகள்கள்...
புகைப்படம்!!
Tamil lyrics for the hit telugu song inkkem inkkem inkkem kaavalae
இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்
இரவில் நித்தம் கனவில் வந்தாயே
நிஜத்தில் என்னை விட்டுசென்றாயே
உன் அருகில் வர ஆசை கொண்டேனே
நீ தள்ளி தள்ளி விலகிச்செல்ல ஏங்கி ஏங்கி சாகின்றேனே
இன்னும் இன்னும் என்ன வேண்டும்
போதும் நீ போதும்
ஆசை பார்வை ஒன்று போதும்
உயிரின் உயிர் நீளும்
மௌனம் கொஞ்சம் கலைத்திடு போதும்
வார்த்தை ஒன்று சொல்லிடு நீயும்
வேறு என்ன இன்னும் வேண்டும்
மரணம் அது தூரம்
காதல் கொன்டே வந்தேன் நானும்
காயம் பல தந்தாய் நீயும்
வேறு
ஸ்காட்லாந்து
தென்றலே
என்
ஜன்னலோரம்
வீசாயோ..
அண்டை நாடுகளை
அலங்கரிக்கும்
அழகு ஓவியமே
என்றேனும்
என்
கைகள்
சேர்வாயோ...
மலை,கடல்
ரசிக்கிறாய்
இந்த மடுவை
சற்றேனும்
நினைப்பாயோ...
மடை திறக்கும்
வெள்ளமாய்
மனமோடும் உன்னோடு
மனமிறங்கி
ஏற்பாயோ...
வீரத்தின் உச்சகட்டமாய் அஹிம்சை
கோபத்தின் உச்சகட்டமாய் பொறுமை
தண்டனையின் உச்சகட்டமாய் மன்னிப்பு
கடவுளின் உச்சகட்டமாய் மனசாட்சி
இருந்துவிடில்
மனிதனின் உச்சகட்டமாய் மனிதம்
இருக்கும்
உன்னை காணும் முன்பு...
உயிர் உள்ளவரை வாழ்ந்தால் போதும்
என்றெண்ணினேன்
உன்னை கண்ட பின்பு...
இந்த உலகுள்ளவரை வாழவேண்டும்
என்றெண்ணினேன்
உன்னோடு....
2008லிருந்து 2013 வரை நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் . எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . அவள் திருமணம் முடிந்ததும் இதை பற்றி என் பெற்றோரிடம் பேசலாம் என்று முடிவு செய்திருந்தேன் . இதற்கிடையில் என் தங்கையும் ஒருவரை காதலிப்பதாக தெரியவந்தது . என் பெற்றோருக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருந்தது . முதலில் ஒப்புக்கொள்ளவில்லை பிறகு வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார்கள் . அவர்கள் ஒத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட அந்த இரண்டு வருடகாலம் அவர்கள் பட்ட வலியை என்னால் பார்க்க முடியவில்லை . எனவே என் காதலை தியாகம் செய்வது என்று நான் முடிவு செய்தேன் . ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக என் காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந