புது கவிதை

புற்களின் மீது பனித்துளி
நாமே எழுதுவோம் நம் விதி....!!!
வானம் பூமி காற்று
வந்தோம் இங்கு நேற்று....!!!
சொற்கள் சுவைக்கும் - தமிழ்
சொன்னால் இனிக்கும் மொழி....!!!
வாழ்க்கை நமக்கு கனி
வாழ்வோம் அதற்கு இனி....!!!

தீயதை கொழுத்துவோம்
தீமையை விரட்டுவோம்
கதிரவனை எழுப்புவோம்
காரிருள் அகற்றுவோம்
உண்மை உரைப்போம்
உலகம் வெல்வோம்.............!!!

எழுதியவர் : தமிழ் தேசம் (9-Jul-16, 7:34 pm)
Tanglish : puthu kavithai
பார்வை : 334

மேலே