வறுமை-கங்கைமணி

வறுமையிடம் வசப்பட்டு
வாழ்ந்தது போதுமென்று
சிந்தனையில் அச்சிட்டேன்
முடிந்தது வறுமையென்று.,

அச்சிட்ட இடத்தில் நான்
தேதி போட மறந்துவிட்டு
நாளை என்ற வார்த்தையைத்தான்
நருக்காக எழுதிவிட்டேன்!

நாளையும் நகருது
வறுமையும் தொடருது
பாடுபட்டு பணம் சேர்த்து
பணக்காரன் ஆவதற்கு,
வறுமையை முடித்துவைக்கும்
தேதி ஏன் தயங்குது?!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (15-Jul-16, 1:07 am)
பார்வை : 120

மேலே