காதல் களி
உன் மனதின் கேள்வியாய்
நான் உன் முன்னே
பதில் வேண்டி நிற்கிறேன்
என் மனதின் கனவாய்
நீ என் முன்னே
கானம் பாடி போகிறாய்
நீ போகும் வழியில்
உன் முகம் பார்த்து
நானிருக்கிறேன்.
உன் நடை அசைவில்
உன் காதல் புரிகிறது
ஆனாலும் ஒரே ஒருமுறை
விழியோர பார்வையால்
கண்சிமிட்டி சொல்லும்வரை
உதட்டோரம் துடிதுடிக்க
சிறுநகை சிந்தி
உன் காதல் காட்டும்வரை
மீண்டும் மீண்டும்
அதே கேள்வியோடு
வருகின்றேன் நான்
உன் முன்னே
அந்த விழியோர
கனவைக்காண.
எனை தினம் காண
இது உந்தன்
காதல் களியோ
அறியேனே.