அன்னை !
கருவறையில் கடவுள் தந்த உன்னை -அவள்
ஈரைந்து மாதம் சுமந்து மண்ணில் தர
அவள் எடுத்தது மறுஜென்மம் !
சீராட்டி மகிழ்வாள் இன்னும்
பாராட்டி பெருமை படுவாள் !
உன் வளர்சிதான் அவள் வாழ்க்கை
உன் புகழ்சிதான் அவள் உயிர் மூச்சு !
இறுதிவரை உறுதியான பாசம் -இன்னும்
உன் ஒவ்வொரு அசைவுகளிலும்
என்றுமே உன் அன்னையாக !
ஸ்ரீவை.காதர்.