மழலை

யாரை நம்பி
நீ பிறந்தாய்
தரணியில்...

தாயை மட்டும்
அழுது புரண்டு
தேடுவாயே...

அன்னை வாரி
தூக்கிய பின்னே
நின்றிடுமே அழுகை...

கண் திறந்திடும்
முன்னமே அறிவாயே
அன்னை எவளென்று...

வேண்டியதை அடம்
பிடித்து பெறுவாயே...
பிஞ்சு கையால் அன்னை
கரம் பிடித்து
நடை பழகுவாயே...

எழுதியவர் : பவநி (12-Sep-16, 7:27 am)
Tanglish : mazhalai
பார்வை : 48

மேலே