கல்யாணக் கனவுகளோ

கனிமொழியால்
கருத்தைக் கவர்ந்த
கன்னியுன் கண்களில்
கல்யாணக் கனவுகளோ ?

கரையுடைத்துக்
கன்னத்தில் கரைந்தோடும்
கண்ணீரின் கதையறிந்தேன் !

கலங்காதே ....!
கண்மணியே !
கண்ணனின் கழல்பற்றிக்
கசிந்துருகிக்
கவிபாடு !
கரம்பிடிப்பான்
கணவன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Sep-16, 6:45 pm)
பார்வை : 246

மேலே