கன்னியவள் இடை

அகர்முகப் பொழுதின் கனவினில்
நிகர்முகம் நிலவாய் வந்தாள் !
மாசற்ற உருவமவள் மல்லிகையின்
வாசமுள்ள வனப்பான இடையழகி !
கடந்திட்ட கன்னியவளைக் கண்டதும்
இடம்பெயர்ந்தது இதயமும் அவளிடம் !
இதமான சூழலானது இதயத்தில்
பதமான இடையை நோக்கியதும் !
தாபங்கள் வழிகின்ற இதயமானது
கபடமறியா கன்னியின் அழகானது !
மறக்கவும் முடியாத இடையழகால்
உறங்கவும் இயலாத நிலையானது !
பூங்காற்று சுகம்தரும் சுந்தரயிடை
தங்கமாய் ஒளிரும் தளிர்கொடியிடை !
தஞ்சம் அடைந்திடும் நம்முள்ளமும்
நெஞ்சம் படபடக்கும் இடையழகாலே !
கணநேரம் பார்த்தால் மெல்லிடையை
குணவதியின் குணாதிசயமும் புரிந்திடும்!
சந்தன இடையழகும் ஈர்த்திட்டால்
சந்தடியும் இடையூறாய் தெரியாது !
பூமகளின் இடைதனும் மயக்கிடும்
கோமகளின் கோலத்தால் பூரிக்கும்!
மனதளவில் மாற்றிடும் மன்மதனாய் !
மனமும் உருகிடும் இடையழகால் !
காயம்பட்ட நெஞ்சமும் ஆறிவிடும் !
வேயப்பட்ட தேகமாய் தேறிவிடும் !
சரசரவென விழுந்திடும் சொற்கொண்டு
சரமெனத் தொடுத்திடும் கவிமலர்களை !
இலட்சியமாக கொள்ளும் நெஞ்சமும்
இலயித்திடும் மனதும் மங்கையிடம் !
துவண்டிடும் காலத்தில் தேற்றிடும்
துவக்கிடும் இன்பத்தை இடையழகும் !
அழுகின்ற இதயமும் ஆனந்தமடையும்
எழுகின்ற உணர்வுகள் உருவமாகும் !
களம்காண ஆவலுடன் எழுதினேன்
உளமார உள்ளத்தில் தோன்றியதை !
( அகர்முகம் = விடியற்காலை )
பழனி குமார்