வேதாந்த சாத்திரத்தில் மனம்
இந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள், மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்;
மனம்:
சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.
சித்தம்:
பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலயமாக திகழம் மனதை சித்தம் எனப்படுகிறது.
புத்தி:
தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலயமான சித்தத்தில் தொலைவில் வருபவனை இராமன் என்றோ அல்லது கிருட்டிணன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது; சித்தத்தில் ஏற்கனவே இராமனை அல்லது கிருட்டிணனைப் பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் இராமன் அல்லது கிருட்டிணன் என்ற முடிவிற்கு வருகிறது. ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம். இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்.
அகங்காரம்:
மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் இராமனை அறிகிறேன், நான் கிருட்டிணனை அறியவில்லை, என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.
நன்றி:விக்கிப்பீடியா