சாப விமோசனம்
கடந்து கொண்டேயிருக்கும்...
காலத்தை நான் கடக்க,
எத்தனித்த போது....
அவளைப் போன்ற,
அவளை கண்ணுற்றேன்........
தாபத்தால் தவித்த என்னை நோக்கி,
கோபத்தால் விழிசிவந்தாள்........
அவள் பார்வையில்,
கல்லாகிப் போனேன்...
கல்லானாலும் கடுந்தவம் புரிந்தேன்.....
தீக்குளித்து வரும்,
சீதையின்-
பாதத்தூளியின்,
ஸ்பரித்திற்காக........