வலி - வலியது


இயற்கை நுகர்வினை...
இயன்ற அளவில் பிரித்து வைத்த...

ஜாதி, ஜாதக, அந்தஸ்து,
என்னும் வஸ்த்துகளால்,
மலினமாக்கப்பட்ட அன்றே...
மொத்த வாழ்வையும்,
பணயம் வைப்பதை தவிர்த்திருக்கலாம்...

எல்லாவற்றிற்குமான,
விலை நிர்ணயத்தை,
நிராகரித்திருக்கலாம்....

தொடர் ஏமாற்றத்தினால்,
மரணத்தை யாசிப்பதைப்பற்றி....
யோசித்திருக்கலாம்....

வலியது எஞ்சும் என்றால்,
இதில் மிஞ்சியவர்களாவது,
இயற்கையுடன் உடன்பட்டிருக்கலாம்....

நம்மை தொடர்ந்து வெல்லும்,
காலத்தை-
இந்நேரம் வென்றிருக்கலாம்......

எழுதியவர் : ரமண பாரதி (30-Jun-11, 9:21 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 403

மேலே